இந்திரனும் சிறுகுரங்கும்!
நாம் வாழ்க்கையில் பலதரப்பட்ட மக்களைச் சந்திக்கிறோம். சிலர்
செல்வந்தர்களாகவும், பலர் ஏழ்மையில் உழல்பவராகவும் இருக்க
காணுகிறோம். இந்நிலைமை ஏன்?
சிலர் பரம்பரைப் பணக்காரர்களாகவும், சிலர் தன் உழைப்பால் பெரிய நிலைக்கு
உயர்ந்தவர்களாகவும், சிலர் பரம்பரைப் பணக்காரர்களாகயிருந்து பின் தாழ்வுற்று
வறியவர்களாகவும், சிலர் ஏழ்மையில் பிறந்தாலும், தன் சுயமுயற்சியால் பெரும் பணக்காரர்களாக ஆகுவதையும் நாம் பார்க்கிறோம். ஏன் இந்த நிலை?
சிலர் பெரும் பணக்காரர்களாக இருந்தும் மனத்தளவில் பிச்சைக்காரர்களாக
இருப்பதையும், மேலும் சிலர் பிச்சையெடுத்து உண்ணும் நிலைமையிலும்,
பிறருக்கு ஈந்து மனதளவில் பணக்காரர்களாக திகழ்வதும் கண்கூடு. இதற்கு
காரணம் என்ன?
இதற்கெல்லாம் அறிவியல் ரீதியாக விளக்கம் காண முடியாது. ஆன்ம வழியில்
இதற்கு விளக்கம் தேடமுடியும். அப்படி விளக்கம் காண தேடியதின் விளைவாக
எழுந்ததுதான், சமயங்களின் பரிணமிப்புகளும், பலதரப்பட்ட சமயக் கோட்பாடுகளும்.
இதெற்கெல்லாம், கடவுள் காரணம் என்று சுலபமாக சொல்ல முடியாது.
இதேல்லாம், கடவுளின் செயல் என்று சமணமும் ஒப்புக் கொள்வதில்லை.
கடவுளின் செயல் என்றால் அதற்கு முழுச் சமாதானம் கூற முடியாது. இது நிற்க!
மேலே கூறியவற்றிக்கு சமாதானம் கூறும் பொருட்டு சமணம் ஊழ்வினை வாதத்தை முன் நிறுத்தியது. ஒருவன் ஒரு பிறவியில் செய்த பாவ, புண்ணியப் பயன்களை வரும் பிறவிகளில் அவன் அனுபவித்தே ஆகவேண்டும். பணக்காரரின் மகனாக பிறப்பவன், தந்தையின் மறைவிற்குப் பிறகு நொடிந்து, வறுமைப் பற்ற பிச்சைக்காரன் ஆகிறான். மற்றொருவனோ, ஏழ்மையில் பிறந்தாலும், பின் செல்வச் செழிப்பிலே திளைக்கிறான். இதற்கு காரணமாக அமைவது ஊழேயாம்.
இவற்றை வெகு அழகாக விளக்குகிறார் திருத்தக்க தேவர் பெருமான்.
“பெரிய இன்பத்து இந்திரனும்
பெட்ட செய்கைச் சிறுகுரங்கும்
உரிய செய்கை வினைப்பயத்தை
உண்ணும் எனவே உணர்ந்து அவனை
........”
- சீவக சிந்தாமணி (2815)
என் உரை:
தேவருலகின் தலைவனான இந்திரன், சுகபோகங்களில் திளைப்பதும், சிறுமைச்
செயல்கள் செய்து திரியும் சிறிய குரங்கு அனுபவிப்பதும் தத்தம் நல்வினை,
தீவினைப் பயன்களாலேயாம்.
அவர் மேலும் அப்பாட்டை இவ்வாறு முடிக்கிறார்.
”அரியர் என்ன மகிழாது
எளியர் என்ன இகழாது
இருசார் வினையுந் தெளிந்தாரே
இறைவன் நூலும் தெளிந்தாரே”
அதனால், ஆகா இவர் பெரியவர் என்று மகிழாமல், அய்ய.. இவர் சிறியவர்
என்று இகழாமல், அவர்களின் நிலைமைக்கு அவர்கள் வினைப்பயன்களே
என்று தெளிந்து, நல்வினை/தீவினை அகற்றி இறைவன் நிலையடையுங்கள்
என்று நமக்கு அறிவுறுத்துகிறார்.
இதேக் கருத்தை கணியன் பூங்குன்றனார் இவ்வாறு பாடுவதைப் பாருங்கள்.
“..திறவோர் காட்சியிற் தெளிந்தனம் ஆகலின்
மாட்சியிற் பெரியோரை வியத்தகும் இலமே,
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே....”
இரா.பானுகுமார்
Monday, February 15, 2010
Friday, February 12, 2010
அண்ணாத்தல் செய்யாது அளறு
அண்ணாத்தல் செய்யாது அளறு!
நிறைய அன்பர்கள் கேட்டு விட்டார்கள். ’ஏன் இப்பொழுதெல்லாம் அவ்வளவாக
எழுதுவதில்லை’. நிறைய எழுதவேண்டும்தான். நேரம் கிடைக்கவில்லை என்று
நேரத்தின்மேல்ப் பழிப்போட விரும்பவில்லை. :-)
இதோ இப்போது எழுத ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. இன்று, என்
இனிய நண்பர் சுரேஷிடம் பேசிக் கொண்டியிருக்கும் போது திருக்குறளில்
’அண்ணாத்த செய்யுமாம் அலரு’ அப்படி என்று வருமாமே, அதற்கு என்ன
பொருள் என்று கேட்டார். திடுதிப்புன்னு கேட்டா என்னாலச் சொல்ல முடியாது.
ஆனா ‘அண்ணாத்தல் செய்யாது அளரு’ என்று புலால் மறுத்தலில் வரும் குறள்
அது. கொஞ்சம் டைம் கொடுத்திங்கனா, பார்த்துவிட்டு சொல்கிறேன் என்று
அப்போதைக்கு நழுவினேன்.
ஆனாலும் புலால் மறுத்தல் அதிகாரத்தில் வரும் அந்தக் குறள் என் மனதில்
எதிரொலித்துக் கொண்டேயிருந்தது. வீட்டிற்கு வந்தவுடனே பரிமேலழகரைப்
புரட்டினேன்.
”உண்ணாமை யுள்ள துயிர்நிலை யூனுண்ண
வண்ணாத்தல் செய்யா தளறு” - திருக்குறள் (255)
பரி என்னா சொல்றார்னா?..
”உயிர் நிலை ஊன் உண்ணமை உள்ளது -ஒரு சார் உயிர் உடம்பின் கண்ணே நிற்றல் ஊன் உண்ணாமை என்கின்ற அறத்தின் கண்ணது; உண்ண அளரு அண்ணாத்தல் செய்யாது- ஆகலான், அந்நிலை குலைய ஒருவன் அதனை உண்ணுமாயின் அவனை விழுங்கிய நிரயம் பின் உமிழ்தற்கு அங்காவாது”.
அவரே தன் சிறப்புரையில் (விரிவுரை)..
”உண்ணப்படும் விலங்குகள் அதனால் தேய்ந்து சிலவாக ஏனைய பலவாய் வருதலின் ’உண்ணாமை உள்ளது உயிர்நிலை’ என்றார். ‘உண்ணின்’ என்பது ‘உண்ண’ எனத் திரிந்து நின்றது. ஊன் உண்டவன் அப்பாவத்தான் நெடுங்காலம் நிரயத்துள் அழுந்தும் எனபதாம். கொலைப் பாவம் கொன்றார் மேல் நிற்றலின் பின் ஊன் உண்பார்க்குப் பாவம் இல்லை என்பாரை மறுத்து, அஃது உண்டு என்பது இவ்விரண்டு பாட்டானும் கூறப்பட்டது”.
அவரின், விரிவுரையில் ”உண்ணப்படும் விலங்குகள் அதனால் தேய்ந்து சிலவாக ஏனைய பலவாய் வருதலின் ’உண்ணாமை உள்ளது உயிர்நிலை” என்ற வாக்கியத்தை படித்தவுடன் திருக்குறளின் அத்தாரிட்டி என்று போற்றப்படும் ஒரு உரையாசிரியர் எப்படி இவ்வாறு எழுதினார் என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.
என்ன சொல்லவரார்னா? விலங்குகளைக் கொன்று தின்றால் அவற்றின் எண்ணிக்கைகள் குறைந்துக் கொண்டே வருமாம். அதனால், ஊன் உண்ணாமல் இருப்பதே உயிர்நிலை என்று சொல்கிறார். ஊன் உண்ணாமலிருந்தால் அவைகள் பலவாக பெருகுமாம். இது எப்படியிருக்கு பார்த்திங்களா? லாஜிக் உதைக்கிறதே!
குறளின் உரை சரியில்லையே! பின் எப்படி உரை வரும்.
என் பார்வையில்
உயிரின் இயல்புகளில் ஊன் உண்ணாமையும் ஒன்று. Instinct Characteristics என்பார்களே அதுமாதிரி. ஊன் உண்ணாமை. அஃதாவது, உயிரின் பலப் பண்புகளில் ஊன் உண்ணாமை என்ற இயல்பும் ஒன்று. இது உயிரைப் பற்றியச் சமணப் புரிதல்.
’உண்ணாமை யுள்ள துயிர்நிலை’ - ஊன் உண்ணாமையே உயிரின் பண்பு அல்லது நிலை. உயிரின் பண்புக்கு மாறாக ஊன் உண்டால் மிகவும் அஞ்சத்தக்கக் கதியாகிய நரகக் கதிக்கு சென்று அழுந்திவிடுவீர்கள். அப்படி அழுந்தப் பட்ட உயிர் நரகத்தில் இருந்து வெளியே வரமுடியாது. நரகம் வழிவிடாது என்பதுதான் அக்குறளின் கருத்து.
இது இவ்வாறாருயிருக்க, ஊன் உண்டால் உயிர்கள் குறைந்துவிடும் என்று சொல்வது இங்கு பொருந்தாது. எவ்வாறெனின், உயிருக்கு அழிவில்லை. உடல்தான் அழிகிறது. மனிதக் குலம் இப்பூமியின் கண் தோன்றுவதற்கு முன்னமே, டைனாசோர் போன்ற விலங்குகள் இப்பூமியின் கண் இருந்து மறைந்ததாக நாம் அறிவோம். மனிதர்கள் உண்டா அழிந்துப் போயின? அல்லவே! இயற்கையாய் அவைகள் அழிந்துப்பட்டன.
இதனால், பரிமேலழகர் உரை இக்குறளுக்கு முற்றும் முரண்.
இரா.பானுகுமார்,
சென்னை.
Sunday, November 15, 2009
திருக்குறள் சில கருத்துக்கள்
http://sivathamiloan.blogspot.com/2009/11/blog-post.html
சிவத்தமிழோன் என்ற நண்பர் தன் வலைப்பதிவில் திருவள்ளுவர் திருவுள்ளம் சைவம் என்று மிக நன்றாகவே எழுதியிருந்தார். படித்தவுடன் ஒவ்வொருக் கருத்துக்கும் என்னுடைய பின்னூட்டை எழுதலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால்,சில பின்னூட்டுக்கள் மற்றும் கொடுத்து அவரின் பதில் எவ்வாறு அமைகிறது என்று பார்க்க நினைத்தேன். பதில்கள் யான் எதிர்ப்பாத்த மாதிரிதான் இருந்தன. அவரிடம் பின்னூட்டு தொடர்வதில் பயன்னில்லை, ஆதலின், என் கருத்தை ஈண்டு பொதுவாக முன் வைக்கிறேன்!
தமிழ்க் குழுமங்களில் நிறைய முறை திருக்குறள் பற்றி அலசியாயிற்று! திருக்குறள் பற்றிய வழி வழி வரும் சில கர்ண கதைகளை முழுமையாக நம்புகிறார்கள். நம்புவதோடு மட்டும் இல்லாமல் அதையே தங்களுக்கு ஆதரவாக குறிக்கவும் செய்கிறார்கள். இதில் சில விதிவிலக்கான அறிஞர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இன்றைய இணைய தமிழறிஞர்கள் கவனிக்க தவறும் சில கருத்துக்களை சிலவற்றை கீழே கொடுத்திருக்கிறேன்.
திருக்குறள் சமயம் பற்றி ஆராயும் வலைஞர்கள் கவனிக்க வேண்டியவை
1. திருக்குறள் சமயம் அதன் கடவுள் வாழ்த்தில் தான் ஆராய வேண்டும். திருக்குறளில் இந்திரனைப் பற்றி, தாமரைக் கண்ணான் பற்றி, அந்தணர் பற்றி, காமத்துப் பாலை பற்றி சொல்லியிருக்கிறது போன்ற வாதங்கள் ஆராய்ச்சிக்கு எடுபடாது.
2. திருக்குறள் கடவுள் வாழ்த்தில் வரும் குறிச்சொற்களான “ஆதிபகவன்”, ”வாலறிவன்”,
“அறவாழி அந்தணன்”, ”ஐந்தவித்தான்”, ”மலர்மிசை ஏகினான்”, “எண்குணத்தான்”, “வேண்டுதல் வேண்டாமையிலான்” போன்ற சொற்றொடர்களுக்கு இலக்கணம் காண முயன்றாலே குறளின் ஆசிரியர் சமயத்தை எளிதில் உள்ளலாம்.
3. கடவுள் வாழ்த்தில் வரும் குறிச் சொற்களைப் பற்றி நிகண்டுகள் என்ன சொல்கின்றன என்று பார்க்கலாம்.
4. திருக்குறள் நீதி நூல். அது ஒரு வாழ்வியல் நூலும் கூட. அதில் பலதரப் பட்ட செய்திகள் சொல்லப்பட்டிருக்கும். காட்டாக, ஒரு நாட்டின் மன்னன் எவ்வாறு நடந்துக் கொள்ள வேண்டும் என்று கூறும் குறளில் (குறள்: 550)மரண தண்டனையைப் பற்றி கூறியிருக்கிறது அதனால், அது சமண நூலாகாது என்று துணிகிறார்கள். இக்குறளில் சமயத்தை ஏன் தேடுகிறார்கள்?
5. தமிழில் தோன்றிய நூற்களில் மிக சிறப்புடைத்து திருக்குறள். அக்குறளை ஏன் சைவத் திருமுறைகளில் ஒன்றாக வைக்கவில்லை என்ற தமிழ்த் தென்றல் திரு.வி.காவின் கேள்விக்கு இதுவரை யாரும் விடைக் கண்டதாகத் தெரியவில்லை. அவரின் கட்டுரையிது.
http://www.treasurehouseofagathiyar.net/37300/37332.htm
http://www.treasurehouseofagathiyar.net/37300/37357.htm
6. சமகால இலக்கியங்கள் குறளின் சமயத்தை ஆராய துணைபுரியும்.
சிவத்தமிழோன் அவரின் கட்டுரைக்கு என் மறுப்புரை
1. அவர்: //பகவன் எனும் சொல் சமணத்துடன் தொடர்பானதாயின் அது சமண நூல் ஆகிவிடுமா என்ன? இன்று வேதம்,வேதாகமம்,வீபூதித் திருநாள் என்பன கிருஷ்தவத்துள் புழக்கத்தில் இருப்பது கண்கூடு!//
என் பதில்: வேதம், வேதாகமம், வீபூதித் திருநாள் போன்ற சொல்லாடல்கள் இன்றைய கிருத்துவர்கள் உபயோகித்தாலும் அவை கிருத்துவ பதங்கள் இல்லை என்ற தங்கள் கருத்தை யான் ஆமோதிக்கிறேன். கிருத்துவ பைபிள் தமிழாக்கம் செய்தவர்கள் சைவத் பெருந்தகையர்கள் என்பதை தாங்கல் அறிவீர்கள் என்று நினைக்கிறேன்.
http://www.treasurehouseofagathiyar.net/27700/27752.htm
இன்று இச்சொற்களை கிருத்துவம் உபயோகித்தாலும் அவைகள் முதன்
முதலிலேயே சைவத் தமிழ் இலக்கியங்களில் விரவி வருவதைக் கொண்டு அவை கிருத்துவ சொற்றொடர்கள் அல்ல என்பதை எளிதில் உள்ளலாம். :-)
அவ்வாறே “ஆதிபகவன்” என்ற சொல்லாட்சி முதன் முதல் சமணத் தமிழ் இலக்கியங்களில் விரவி வந்து பின்னாளில் மற்ற சமயங்கள் எடுத்தாண்டன எனறு யான் சொன்னால் தாங்களும் ஆமோதிப்பீர்கள் என்று கருதுகிறேன். ;-)
2. அவர்: //சமண சமய அறிமுகத்தால் தமிழில் அச்சொல் புழக்கத்தில் இருந்தமையால் வள்ளுவர் பயன்படுத்தியிருக்க வாய்ப்புண்டல்லவா? ஏனெனில் சமணநூலே திருக்குறள் என்பதற்கு எந்தவித சிந்தனையும் இன்றி இதையே சுட்டுகின்றனர்.//
என் பதில்: அதைத்தான் யானும் கேட்கிறேன். குறளின் கடவுள் அதிகாரத்தில் உள்ள சொற்றொடர்களை ஏன் சைவம் பொன்னேப் போல் எடுத்தாளவில்லை? மாறாக, அவைகள் சமண இலக்கியங்களில் விரவி வருகின்றனவே! ஏன் வரவில்லை என்றால், அவைகள் சமணத் சொற்றொடர்கள்! ஆகையால், சைவ இலக்கியங்களில் விரவி வரவில்லை. என்னை?
3. அவர்: //திருக்குறளுக்கு சமண நூல் எனும் மாயை சூட்டியவர்கள் மறுபிறப்புக் கொள்கையை மறந்துபோனது ஏனென்று விளங்கவே இல்லை.//
யான்: தாங்கள் என்ன சொல்லவருகிறீர்கள் என்று புரியவில்லை. சமணத்தில் “மறுபிறப்பு” இல்லை என்று சொல்ல வருகிறீர்களா? மறுபிறப்பில்லை என்றால் ஊழ் இல்லை, சமணக் கோட்பாடே தோன்றியிருக்காது! :-)
4. அவர்: //எண் குணத்தான் என கடவுளை திருக்குறள் கூறுகின்றது.//
யான்: ஆம் கூறுகிறது! தமிழில் தோன்றிய நிகண்டுகளைப் பார்க்கவும். “எண்குணத்தான்” அருகக் கடவுளுக்கே உரியவை என்று அவைகள் பகரும். சிவபிரானுக்கு எண்குணத்தான் என்று யாண்டும் சொல்லப்படவில்லை.
5. அவர்: //சமண, பௌத்தப் புலவர்கள் திருவள்ளுவரையோ அன்றி
திருக்குறளையோ போற்றிப் புகழ்ந்ததாக இட்டுக்கட்டிக்கூட காட்டமுடியாது.//
யான்: :-) என்ன ஒரு மறுக்க முடியாத ஆதாரம். தங்களுக்கு சமணத் தமிழ் இலக்கியங்களில் பயிற்சி இல்லை என்பதைத் தான் தங்களின் கூற்று தெரிவிக்கிறது. சொல்ல போனால் நான் கேட்டிருக்கவேண்டிய கேள்வியிது. ;-) சமணர்கள் குறளைத் தங்கள் வேதமாகக் கூறியிருக்கிறார்கள். ”எம் ஒத்து”, என்றும் ”தேவர் உரைப்ப தெளிந்தேன்” (காலத்தால் முந்திய ஆதாரம்) என்றும் கூறியிருக்கிறார்கள். மற்ற சமயத்தவர் அவ்வாறு கூறியதாக யான் படித்ததில்லை. அவ்வாறு வரும்மின், சுட்டவும். திருத்திக் கொள்கிறேன் ஐயா!
6. அவர்: //பொதுநூலாக எழுத வெளிக்கிட்டபிறகு சிவன் எனும் பெயரை தவிர்த்திருப்பார் வள்ளுவர்.//
யான்: ஆமாம். தாங்கள் சொல்வது சரிதான். ”சிவ” என்ற சொல்லாட்சி முதன் முதல் பயின்று வரும் இலக்கியம் “சிலப்பதிகாரம்”. அந்த சொல்லாட்சியும் ‘அருகப்பதவியைச் சுட்ட” “சிவகதி நாயகன்” என்று இளங்கோவடிகள் கூறியிருக்கிறார். ”பிறவாயாக்கை பெரியோன்” என்று
தான் சிவனும் போற்றப்படுகிறாரே தவிர “சிவனுக்கு” சிவன் என்று பயின்று வரவில்லை. :-)
7. அவர்: //எனவே உள்ளீடு இல்லாத சமயங்களின் உரைகளை அச்சமயங்களின் நூல்களை படித்து கேட்டு காலத்தை வீணாக்குவது தவறு என்கின்ற சைவ சித்தாந்த மரபில் திருக்குறளை எடுத்துக்காட்டுகளாக நேரடியாக பயன்படுத்தியிருப்பதில் இருந்து திருக்குறள் சமணநூல் அல்ல என்பதும் சைவநூலே என்பதும் தெளிவாகிறது.//
யான்: 18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சைவ பெரிந்தகையான சிவாமிநாத தேசிகர் எழுதிய “இலக்கணக் கொத்து” என்ற நூலைப் படித்திருக்கிறீர்களா?
http://www.treasurehouseofagathiyar.net/27900/27989.htm
8. அவர்: //சிலப்பதிகாரம் எழுதிய இளங்கோவடிகள் கூட சைவநெறியைச் சார்ந்தவரே என்ற கருத்து வலிமைபெற்றுள்ளது. சிலப்பதிகாரத்தில் காணப்படுகின்ற சமயசார்பற்ற தன்மை கொண்டு இதை உறுதிசெய்வர்.//
யான்: அப்படியா? சிலப்பதிகாரம் படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். இளங்கோவடிகள் சைவப் புலவர் எனின், அருகருக்கு ஏன் குறளின் கடவுள் வாழ்த்தில் வரும் குறிச்சொற்களைப் வைத்துப் போற்றிப் புகழ்ந்துப் பாடியிருக்கிறார்? :-)
9. அவர்: //திருக்குறள் ஏனைய சமயங்களுக்கு ஒவ்வாத கருத்துகளைக் கொண்டது என்பதையும் சைவ சித்தாந்த நூலே என்பதையும் திருக்குறளை ஆராய்வுசெய்து வாலையானந்த அடிகள் 1926- 27களில் வெளிவந்த செந்தமிழ்ச் செல்வி பத்திரிகையில் எழுதிய கட்டுரைகளை சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் தொகுத்து நூலாக வெளியிட்டிருந்த திருவள்ளுவர் சித்தாந்த சைவர் என்னும் நூல் மெய்கண்டதேவரின் குருபூசையன்று மறுபதிப்பாக வெளியிடப்பட்டிருந்தது.//
யான்: திருக்குறள் சமண நூலே! சமண தமிழ் நூட்களை பின்னாளில் மாற்ற முயன்ற வரலாறு தமிழ் அறிஞர்கள் நன்கறிவார்கள்.
வாழிய நல்லறம்! வளர்க திருவறம்!!
இரா.பானுகுமார், (இரா.பா)
சென்னை.
சிவத்தமிழோன் என்ற நண்பர் தன் வலைப்பதிவில் திருவள்ளுவர் திருவுள்ளம் சைவம் என்று மிக நன்றாகவே எழுதியிருந்தார். படித்தவுடன் ஒவ்வொருக் கருத்துக்கும் என்னுடைய பின்னூட்டை எழுதலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால்,சில பின்னூட்டுக்கள் மற்றும் கொடுத்து அவரின் பதில் எவ்வாறு அமைகிறது என்று பார்க்க நினைத்தேன். பதில்கள் யான் எதிர்ப்பாத்த மாதிரிதான் இருந்தன. அவரிடம் பின்னூட்டு தொடர்வதில் பயன்னில்லை, ஆதலின், என் கருத்தை ஈண்டு பொதுவாக முன் வைக்கிறேன்!
தமிழ்க் குழுமங்களில் நிறைய முறை திருக்குறள் பற்றி அலசியாயிற்று! திருக்குறள் பற்றிய வழி வழி வரும் சில கர்ண கதைகளை முழுமையாக நம்புகிறார்கள். நம்புவதோடு மட்டும் இல்லாமல் அதையே தங்களுக்கு ஆதரவாக குறிக்கவும் செய்கிறார்கள். இதில் சில விதிவிலக்கான அறிஞர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இன்றைய இணைய தமிழறிஞர்கள் கவனிக்க தவறும் சில கருத்துக்களை சிலவற்றை கீழே கொடுத்திருக்கிறேன்.
திருக்குறள் சமயம் பற்றி ஆராயும் வலைஞர்கள் கவனிக்க வேண்டியவை
1. திருக்குறள் சமயம் அதன் கடவுள் வாழ்த்தில் தான் ஆராய வேண்டும். திருக்குறளில் இந்திரனைப் பற்றி, தாமரைக் கண்ணான் பற்றி, அந்தணர் பற்றி, காமத்துப் பாலை பற்றி சொல்லியிருக்கிறது போன்ற வாதங்கள் ஆராய்ச்சிக்கு எடுபடாது.
2. திருக்குறள் கடவுள் வாழ்த்தில் வரும் குறிச்சொற்களான “ஆதிபகவன்”, ”வாலறிவன்”,
“அறவாழி அந்தணன்”, ”ஐந்தவித்தான்”, ”மலர்மிசை ஏகினான்”, “எண்குணத்தான்”, “வேண்டுதல் வேண்டாமையிலான்” போன்ற சொற்றொடர்களுக்கு இலக்கணம் காண முயன்றாலே குறளின் ஆசிரியர் சமயத்தை எளிதில் உள்ளலாம்.
3. கடவுள் வாழ்த்தில் வரும் குறிச் சொற்களைப் பற்றி நிகண்டுகள் என்ன சொல்கின்றன என்று பார்க்கலாம்.
4. திருக்குறள் நீதி நூல். அது ஒரு வாழ்வியல் நூலும் கூட. அதில் பலதரப் பட்ட செய்திகள் சொல்லப்பட்டிருக்கும். காட்டாக, ஒரு நாட்டின் மன்னன் எவ்வாறு நடந்துக் கொள்ள வேண்டும் என்று கூறும் குறளில் (குறள்: 550)மரண தண்டனையைப் பற்றி கூறியிருக்கிறது அதனால், அது சமண நூலாகாது என்று துணிகிறார்கள். இக்குறளில் சமயத்தை ஏன் தேடுகிறார்கள்?
5. தமிழில் தோன்றிய நூற்களில் மிக சிறப்புடைத்து திருக்குறள். அக்குறளை ஏன் சைவத் திருமுறைகளில் ஒன்றாக வைக்கவில்லை என்ற தமிழ்த் தென்றல் திரு.வி.காவின் கேள்விக்கு இதுவரை யாரும் விடைக் கண்டதாகத் தெரியவில்லை. அவரின் கட்டுரையிது.
http://www.treasurehouseofagathiyar.net/37300/37332.htm
http://www.treasurehouseofagathiyar.net/37300/37357.htm
6. சமகால இலக்கியங்கள் குறளின் சமயத்தை ஆராய துணைபுரியும்.
சிவத்தமிழோன் அவரின் கட்டுரைக்கு என் மறுப்புரை
1. அவர்: //பகவன் எனும் சொல் சமணத்துடன் தொடர்பானதாயின் அது சமண நூல் ஆகிவிடுமா என்ன? இன்று வேதம்,வேதாகமம்,வீபூதித் திருநாள் என்பன கிருஷ்தவத்துள் புழக்கத்தில் இருப்பது கண்கூடு!//
என் பதில்: வேதம், வேதாகமம், வீபூதித் திருநாள் போன்ற சொல்லாடல்கள் இன்றைய கிருத்துவர்கள் உபயோகித்தாலும் அவை கிருத்துவ பதங்கள் இல்லை என்ற தங்கள் கருத்தை யான் ஆமோதிக்கிறேன். கிருத்துவ பைபிள் தமிழாக்கம் செய்தவர்கள் சைவத் பெருந்தகையர்கள் என்பதை தாங்கல் அறிவீர்கள் என்று நினைக்கிறேன்.
http://www.treasurehouseofagathiyar.net/27700/27752.htm
இன்று இச்சொற்களை கிருத்துவம் உபயோகித்தாலும் அவைகள் முதன்
முதலிலேயே சைவத் தமிழ் இலக்கியங்களில் விரவி வருவதைக் கொண்டு அவை கிருத்துவ சொற்றொடர்கள் அல்ல என்பதை எளிதில் உள்ளலாம். :-)
அவ்வாறே “ஆதிபகவன்” என்ற சொல்லாட்சி முதன் முதல் சமணத் தமிழ் இலக்கியங்களில் விரவி வந்து பின்னாளில் மற்ற சமயங்கள் எடுத்தாண்டன எனறு யான் சொன்னால் தாங்களும் ஆமோதிப்பீர்கள் என்று கருதுகிறேன். ;-)
2. அவர்: //சமண சமய அறிமுகத்தால் தமிழில் அச்சொல் புழக்கத்தில் இருந்தமையால் வள்ளுவர் பயன்படுத்தியிருக்க வாய்ப்புண்டல்லவா? ஏனெனில் சமணநூலே திருக்குறள் என்பதற்கு எந்தவித சிந்தனையும் இன்றி இதையே சுட்டுகின்றனர்.//
என் பதில்: அதைத்தான் யானும் கேட்கிறேன். குறளின் கடவுள் அதிகாரத்தில் உள்ள சொற்றொடர்களை ஏன் சைவம் பொன்னேப் போல் எடுத்தாளவில்லை? மாறாக, அவைகள் சமண இலக்கியங்களில் விரவி வருகின்றனவே! ஏன் வரவில்லை என்றால், அவைகள் சமணத் சொற்றொடர்கள்! ஆகையால், சைவ இலக்கியங்களில் விரவி வரவில்லை. என்னை?
3. அவர்: //திருக்குறளுக்கு சமண நூல் எனும் மாயை சூட்டியவர்கள் மறுபிறப்புக் கொள்கையை மறந்துபோனது ஏனென்று விளங்கவே இல்லை.//
யான்: தாங்கள் என்ன சொல்லவருகிறீர்கள் என்று புரியவில்லை. சமணத்தில் “மறுபிறப்பு” இல்லை என்று சொல்ல வருகிறீர்களா? மறுபிறப்பில்லை என்றால் ஊழ் இல்லை, சமணக் கோட்பாடே தோன்றியிருக்காது! :-)
4. அவர்: //எண் குணத்தான் என கடவுளை திருக்குறள் கூறுகின்றது.//
யான்: ஆம் கூறுகிறது! தமிழில் தோன்றிய நிகண்டுகளைப் பார்க்கவும். “எண்குணத்தான்” அருகக் கடவுளுக்கே உரியவை என்று அவைகள் பகரும். சிவபிரானுக்கு எண்குணத்தான் என்று யாண்டும் சொல்லப்படவில்லை.
5. அவர்: //சமண, பௌத்தப் புலவர்கள் திருவள்ளுவரையோ அன்றி
திருக்குறளையோ போற்றிப் புகழ்ந்ததாக இட்டுக்கட்டிக்கூட காட்டமுடியாது.//
யான்: :-) என்ன ஒரு மறுக்க முடியாத ஆதாரம். தங்களுக்கு சமணத் தமிழ் இலக்கியங்களில் பயிற்சி இல்லை என்பதைத் தான் தங்களின் கூற்று தெரிவிக்கிறது. சொல்ல போனால் நான் கேட்டிருக்கவேண்டிய கேள்வியிது. ;-) சமணர்கள் குறளைத் தங்கள் வேதமாகக் கூறியிருக்கிறார்கள். ”எம் ஒத்து”, என்றும் ”தேவர் உரைப்ப தெளிந்தேன்” (காலத்தால் முந்திய ஆதாரம்) என்றும் கூறியிருக்கிறார்கள். மற்ற சமயத்தவர் அவ்வாறு கூறியதாக யான் படித்ததில்லை. அவ்வாறு வரும்மின், சுட்டவும். திருத்திக் கொள்கிறேன் ஐயா!
6. அவர்: //பொதுநூலாக எழுத வெளிக்கிட்டபிறகு சிவன் எனும் பெயரை தவிர்த்திருப்பார் வள்ளுவர்.//
யான்: ஆமாம். தாங்கள் சொல்வது சரிதான். ”சிவ” என்ற சொல்லாட்சி முதன் முதல் பயின்று வரும் இலக்கியம் “சிலப்பதிகாரம்”. அந்த சொல்லாட்சியும் ‘அருகப்பதவியைச் சுட்ட” “சிவகதி நாயகன்” என்று இளங்கோவடிகள் கூறியிருக்கிறார். ”பிறவாயாக்கை பெரியோன்” என்று
தான் சிவனும் போற்றப்படுகிறாரே தவிர “சிவனுக்கு” சிவன் என்று பயின்று வரவில்லை. :-)
7. அவர்: //எனவே உள்ளீடு இல்லாத சமயங்களின் உரைகளை அச்சமயங்களின் நூல்களை படித்து கேட்டு காலத்தை வீணாக்குவது தவறு என்கின்ற சைவ சித்தாந்த மரபில் திருக்குறளை எடுத்துக்காட்டுகளாக நேரடியாக பயன்படுத்தியிருப்பதில் இருந்து திருக்குறள் சமணநூல் அல்ல என்பதும் சைவநூலே என்பதும் தெளிவாகிறது.//
யான்: 18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சைவ பெரிந்தகையான சிவாமிநாத தேசிகர் எழுதிய “இலக்கணக் கொத்து” என்ற நூலைப் படித்திருக்கிறீர்களா?
http://www.treasurehouseofagathiyar.net/27900/27989.htm
8. அவர்: //சிலப்பதிகாரம் எழுதிய இளங்கோவடிகள் கூட சைவநெறியைச் சார்ந்தவரே என்ற கருத்து வலிமைபெற்றுள்ளது. சிலப்பதிகாரத்தில் காணப்படுகின்ற சமயசார்பற்ற தன்மை கொண்டு இதை உறுதிசெய்வர்.//
யான்: அப்படியா? சிலப்பதிகாரம் படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். இளங்கோவடிகள் சைவப் புலவர் எனின், அருகருக்கு ஏன் குறளின் கடவுள் வாழ்த்தில் வரும் குறிச்சொற்களைப் வைத்துப் போற்றிப் புகழ்ந்துப் பாடியிருக்கிறார்? :-)
9. அவர்: //திருக்குறள் ஏனைய சமயங்களுக்கு ஒவ்வாத கருத்துகளைக் கொண்டது என்பதையும் சைவ சித்தாந்த நூலே என்பதையும் திருக்குறளை ஆராய்வுசெய்து வாலையானந்த அடிகள் 1926- 27களில் வெளிவந்த செந்தமிழ்ச் செல்வி பத்திரிகையில் எழுதிய கட்டுரைகளை சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் தொகுத்து நூலாக வெளியிட்டிருந்த திருவள்ளுவர் சித்தாந்த சைவர் என்னும் நூல் மெய்கண்டதேவரின் குருபூசையன்று மறுபதிப்பாக வெளியிடப்பட்டிருந்தது.//
யான்: திருக்குறள் சமண நூலே! சமண தமிழ் நூட்களை பின்னாளில் மாற்ற முயன்ற வரலாறு தமிழ் அறிஞர்கள் நன்கறிவார்கள்.
வாழிய நல்லறம்! வளர்க திருவறம்!!
இரா.பானுகுமார், (இரா.பா)
சென்னை.
Sunday, October 11, 2009
பகுத்துண்டு பல்லூயிர் ஓம்புதல்
பகுத்துண்டு பல்லூயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை - திருக்குறள் (322)
இக்குறள் குறித்து மின்தமிழ் குழுமத்தில் அலசப்படுகிறது. சுட்டியைப்
பார்க்கவும்.
http://groups.google.com/group/mintamil/browse_thread/thread/d719a8cfe875af3c/fd09d3b0a544fb9c#fd09d3b0a544fb9c
இக்குறளில் “நூலோர்” என்பது யாரைக் குறிக்கிறது என்பது தான்
இங்கே விவாதப் பொருள்.
எந்த குறளின் கருத்தையும் அறியும் முன் அக்குறள் எந்த அதிகாரத்தில்
கூறப்பட்டுள்ளது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். இக்குறள்
கொல்லாமை என்னும் அதிகாரத்தில் சொல்லப்பட்டுள்ளது என்பதைக்
கருத்தில் கொள்க. இது நிற்க.
"பரஸ்பரப்கிரகோ ஜீவானாம்" - என்பது ஆச்சாரியார் உமாசுவாமி அருளிய
"தத்வார்த்த சூத்திரம்”. இப்பாட்டின் பொருள்: பகிர்ந்து உண்டு, எல்லா
உயிர்களையும் காத்தலே உயிரின் நோக்கம். இதன் எதிரொலியே குறளின்
“பகுத்துண்டு பல்லூயிர் ஓம்புதல்” என்பது.
இன்னுமொரு எ.கா:
”பாங்கமை செல்வராகிப் பகுத்துண்டு வாழ்தல் ஒன்றே
தாங்கிய தவத்தின் மிக்க தவநிலை நிற்றல் ஒன்றே” - நரிவிருத்தம்
நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை
மகாவீரர் காலத்திற்கு பிறகு, ஜைன ஆகமங்கள் தொகுக்கப்பட்டன.
இருசாரார்க்கும் (இல்லறத்தார், துறவறத்தார்), பொதுவாக “கொல்லாமையே”
தலையாய அறமாகக் கொள்ளப்பட்டது. “ஒன்றாக நல்லது கொல்லாமை”
என்ற குறள் இங்கு கருதத்தக்கது.
இக்குறளுக்கு பரிமேலழகர், “அறநூலை உடையார் துறந்தார்க்குத்
தொகுத்த அறங்கள் எல்லாவற்றினும் தலையாய அறம்” என்று உரை
செய்திருக்கிறார். இது பொருந்தாதாம்! இங்கு துறவறத்தார்க்கு சொல்லப்பட்டதாக
பொருள் படும்படி, வலிந்து பொருள் கூறுகிறார். இஃது சமணக் கொள்கையை
மறைக்கவெனில் வேறில்லை!
இரா.பானுகுமார்,
சென்னை
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை - திருக்குறள் (322)
இக்குறள் குறித்து மின்தமிழ் குழுமத்தில் அலசப்படுகிறது. சுட்டியைப்
பார்க்கவும்.
http://groups.google.com/group/mintamil/browse_thread/thread/d719a8cfe875af3c/fd09d3b0a544fb9c#fd09d3b0a544fb9c
இக்குறளில் “நூலோர்” என்பது யாரைக் குறிக்கிறது என்பது தான்
இங்கே விவாதப் பொருள்.
எந்த குறளின் கருத்தையும் அறியும் முன் அக்குறள் எந்த அதிகாரத்தில்
கூறப்பட்டுள்ளது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். இக்குறள்
கொல்லாமை என்னும் அதிகாரத்தில் சொல்லப்பட்டுள்ளது என்பதைக்
கருத்தில் கொள்க. இது நிற்க.
"பரஸ்பரப்கிரகோ ஜீவானாம்" - என்பது ஆச்சாரியார் உமாசுவாமி அருளிய
"தத்வார்த்த சூத்திரம்”. இப்பாட்டின் பொருள்: பகிர்ந்து உண்டு, எல்லா
உயிர்களையும் காத்தலே உயிரின் நோக்கம். இதன் எதிரொலியே குறளின்
“பகுத்துண்டு பல்லூயிர் ஓம்புதல்” என்பது.
இன்னுமொரு எ.கா:
”பாங்கமை செல்வராகிப் பகுத்துண்டு வாழ்தல் ஒன்றே
தாங்கிய தவத்தின் மிக்க தவநிலை நிற்றல் ஒன்றே” - நரிவிருத்தம்
நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை
மகாவீரர் காலத்திற்கு பிறகு, ஜைன ஆகமங்கள் தொகுக்கப்பட்டன.
இருசாரார்க்கும் (இல்லறத்தார், துறவறத்தார்), பொதுவாக “கொல்லாமையே”
தலையாய அறமாகக் கொள்ளப்பட்டது. “ஒன்றாக நல்லது கொல்லாமை”
என்ற குறள் இங்கு கருதத்தக்கது.
இக்குறளுக்கு பரிமேலழகர், “அறநூலை உடையார் துறந்தார்க்குத்
தொகுத்த அறங்கள் எல்லாவற்றினும் தலையாய அறம்” என்று உரை
செய்திருக்கிறார். இது பொருந்தாதாம்! இங்கு துறவறத்தார்க்கு சொல்லப்பட்டதாக
பொருள் படும்படி, வலிந்து பொருள் கூறுகிறார். இஃது சமணக் கொள்கையை
மறைக்கவெனில் வேறில்லை!
இரா.பானுகுமார்,
சென்னை
Subscribe to:
Posts (Atom)